Sunday, April 6, 2008

பெட்னா தமிழ் விழா 2008 மலரில் கார்ட்டூன் போட்டி

முந்தைய பதிவில் பெட்னா மலரில் எப்படி உங்கள் படைப்புக்கள் இடம்பெறலாம் என்று படித்திருப்பீர்கள். இதே மலரில் ஒரு கார்ட்டூன் போட்டி நடத்தவிருக்கிறோம்!

தலைப்பு: அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கைமுறை
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் குடும்பத்தில், அலுவலகத்தில், அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் நிறைய கருத்துக்களும் நகைச்சுவையும் இருக்கின்றன. அவற்றை பிரதிபலிக்கும் விதமாக கருத்துப்படங்கள் அல்லது கேலிச்சித்திரங்களை வரைந்து அவற்றை ஸ்கேன் செய்து எங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பி வையுங்கள். அவற்றில் சிறந்த 10 கார்ட்டூன்கள் விழா மலரில் இடம்பெறும். முதல் மூன்று கார்டூன்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

முக்கியமாக சிறார்கள் இந்தப் போட்டியில் உற்சாகமாக பங்கேற்கவேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.

கார்ட்டூன்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: மே 10, 2008
மின் அஞ்சல் முகவரி: fetna.malar@gmail.com

நன்றி,
வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை மலர்க் குழு
http://www.fetna.org/

1 comment:

MURUGAN S said...

வாழ்த்துக்கள்!