வாழ்த்து மடல்
- Dr. A.P.J. அப்துல் கலாம்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 21 வது தமிழ் விழா கொண்டாடும் இச்சமயத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 21வது தமிழ் விழா கொண்டாடுவது என்றால் என்ன? வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம், 20 முறை சூரியனைச் சுற்றிவிட்டு, 21வது வட்டத்தில் நீங்கள் அடி எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று பொருள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வரிகளுக்கு இணங்க வட அமெரிக்காவிற்கு வந்து உங்கள் திறமையால், அறிவால் உழைத்து நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்த உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். உங்களுக்கு என் வேண்டுகோள்ள் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ, அந்த நாட்டிற்கு உங்களது 100 சதவீத உழைப்பைத் தாருங்கள். தமிழனாகக் கூடி இந்தியனாகப் பரிணமித்து அறிவார்ந்த விழிப்புணர்ச்சி பெற்ற உலகக் குடிமகனாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். ஏனென்றால் இந்தியாவுடனான உங்களது தொப்புள் கொடி உறவு மிகப் பெரிய ஆன்ம பலம் பொருந்தியது. 54 கோடி இந்திய இளைஞர்களுக்கு நல் வழிப்பாதையைக் காட்டி, அவர்களது கற்பனைத் திறனை வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கும் பணியில் உங்களது அறிவைத் தாருங்கள். உங்களது அனுபவத்தைத் தாருங்கள். வாருங்கள், உங்கள் வருங்கால சந்ததி வளர்ந்த இந்தியாவில் அடி எடுத்து வைக்க வளமான இந்தியாவை 2020 க்குள் உருவாக்குவோம்!
Dr. A.P.J. அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர்
2 comments:
It is great.
It was nice of him to do this.
-Muthu
Post a Comment