Tuesday, May 29, 2007

பெட்னா திருவிழாவில் நீங்கள் எப்படிப் பங்குபெறலாம்?

பெட்னா திருவிழாவில் நீங்கள் பலவிதமான வழிகளில் ஈடுபடலாம். உதாரணத்துக்குச் சிலவற்றைக் கீழே தருகிறோம்:

1. விருந்தினராக வந்து கலந்துகொண்டு, நல்ல உணவு, உறையுள் வசதியுடன், அனைத்துக் கலைகளையும் கண்டு களிக்கலாம். இதற்கான அனைத்துச் சிறப்பு ஏற்பாடுகளும் ராலேயில் செய்யப் பட்டுள்ளன.

2. நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால் உங்கள் நிறுவனத்தினைப் பற்றி விழாவில் விளம்பரம் செய்யலாம். ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை வழங்குபவராகவோ, அல்லது பொதுவான கொடையாளராகவோ நீங்கள் இருக்கலாம். உங்களது நிறுவனத்தின் விளம்பரத்தைக் குறைந்த கட்டணத்தில் அதிகமான தமிழர்களைச் சென்றடையுமாறு, "விழா மலரில்" வெளியிடலாம்.

3. நீங்கள் கட்டுரை, கவிதை, நாடகம், பத்தி (column) என்று எழுதித் தள்ளும் திறமை கொண்டவராக இருந்தால், உங்கள் எழுத்துத் திறனை விழா மலரில் காட்டலாம். அதற்கு ஜூன் 6க்குள் உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டும்.

4. கலைத்திறன் மிக்கவரா நீங்கள்? ஆமென்றால் உடனடியாக உங்கள் பகுதி தமிழ்ச்சங்கத்தோடு அல்லது எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை மேடையேற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழா ஒரு நல்ல இடம்.

5. "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்பது வள்ளுவரின் வாக்கு. அதே போல், பொருளில்லாமல் எந்த விழாவும் நடப்பதில்லை. இந்தத் தமிழ்விழா பொலிவுற உங்கள் வள்ளண்மையைக் காட்ட ஒரு வாய்ப்பும் இருக்கிறது. நீங்கள் வள்ளல், அல்லது கொடைவள்ளல் போன்ற தகுதியுடன் விழாவில் முக்கிய உறுப்பினராகக் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் குடும்பத்துக்கான முன்னிருக்கை நுழைவுச் சீட்டுகள், கலைஞர்களுடன் விருந்து போன்ற சிறப்புகளைப் பெறலாம்.

உங்களை வரவேற்கக் காத்திருக்கிறோம்!
விபரங்களுக்கு: www.fetna.org

No comments: