Tuesday, June 12, 2012

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழிசை விழா!!

அமெரிக்க மண்ணில் தமிழிசையை முறைப்படி விதைத்து, வளர்த்து, செழிக்கச் செய்துவரும் பேரவை முயற்சிகளின் அடுத்த கட்டமாக, முறைப்படுத்தப்பட்ட தமிழிசை விழாவுக்கான ஏற்பாடுகள் ஈடேறி வருகின்றன. தமிழிசை விழாவின் போது தமிழிசை பயிலும் மாணவர்களுக்கு அவர்தம் ஆற்றலின் நிலைக்கொப்ப வாய்ப்பளிக்கப்படும். இதை கருத்திற்கொண்டு, தற்போது அனைத்து நிலைகளுக்கும் இன்னிசையேந்தல் திரு.ஆத்மநாதன் அவர்கள் மூலம் தமிழ்ப்பாடல்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

நமது வெள்ளி விழாவையொட்டி, தமிழிசை விழாவும் இடம் பெற உள்ளது. அது குறித்த கூடுதல் விபரங்களை தமிழிசை விழா ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டுப் பெற்றுப் பயனடைக.! மேலும், இவ்விழா கீழ்க்காணும் பிரிவுகளாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

அடிப்படைப்பாடல் பிரிவு. இரண்டு மணி நேரம். தமிழ் கீதங்கள், தமிழ் வர்ணங்கள், தமிழ்க் கீர்த்தனைகள். இணையதளத்தில் சில வெளியிடப்படும். தமிழிசை பாடல் பிரிவு. இரண்டு மணி நேரம். பாடல்களை அவரவரே தேர்வு செய்துகொள்ளலாம்.

தமிழிசை விழாவைப் பற்றி அறிந்து கொள்ளவும், முன்பதிவு செய்து கொள்ளவும் இச்சுட்டியைச் சொடுக்கிப் பயனடைக!

ஒருங்கிணைப்பாளர்கள்: தேவகி செல்வன் (devakiselvan@yahoo.com)
கரு.மலர்ச்செல்வன் (kmalarselvan@yahoo.com)
கொழந்தைவேல் இராமசாமி (samyrama1@yahoo.com)
லதா பார்த்தசாரதி (partha_latha@hotmail.com )
பொற்செழியன் இராமசாமி (Porchezhian@hotmail.com )

இவ்விழாவைத் தொடர்ந்து பல ஊர்களிலும் தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்தி இன்புற்று மகிழ்வோம்.

தமிழிசை விழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுக்க வருகிறார் கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன் அவர்கள். கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேலான இசைக் கச்சேரிகளை நடத்திய பெருமைக்கு உரியவர். இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகரின் மாணவர். தமிழை, அதன் ஒலிப்பு பிசகாமல் பாடி, தமிழிசையின் மூலம் கேட்போரைக் கட்டிப் போடுவதில் கைதேர்ந்த வல்லவரான இவரது நிகழ்ச்சி விழாவில் இடம் பெறுவது இசையார்வலர்க்கு.இன்ப அதிர்ச்சி!! 


1 comment:

பழமைபேசி said...

இப்பதிவில் இருக்கும் காணொலியில், எத்தனை முறை ‘முதன் முதலா’ என உச்சரிக்கப்படுகிறது? சரியாகச் சொல்பவர்களுக்கு, பரிசளிக்கப்படும்.