நமது வெள்ளி விழாவையொட்டி, தமிழிசை விழாவும் இடம் பெற உள்ளது. அது குறித்த கூடுதல் விபரங்களை தமிழிசை விழா ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டுப் பெற்றுப் பயனடைக.! மேலும், இவ்விழா கீழ்க்காணும் பிரிவுகளாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடிப்படைப்பாடல் பிரிவு. இரண்டு மணி நேரம். தமிழ் கீதங்கள், தமிழ் வர்ணங்கள், தமிழ்க் கீர்த்தனைகள். இணையதளத்தில் சில வெளியிடப்படும்.
தமிழிசை பாடல் பிரிவு. இரண்டு மணி நேரம். பாடல்களை அவரவரே தேர்வு செய்துகொள்ளலாம்.
தமிழிசை விழாவைப் பற்றி அறிந்து கொள்ளவும், முன்பதிவு செய்து கொள்ளவும் இச்சுட்டியைச் சொடுக்கிப் பயனடைக!
ஒருங்கிணைப்பாளர்கள்: தேவகி செல்வன் (devakiselvan@yahoo.com)
கரு.மலர்ச்செல்வன் (kmalarselvan@yahoo.com)
கொழந்தைவேல் இராமசாமி (samyrama1@yahoo.com)
லதா பார்த்தசாரதி (partha_latha@hotmail.com )
பொற்செழியன் இராமசாமி (Porchezhian@hotmail.com )
இவ்விழாவைத் தொடர்ந்து பல ஊர்களிலும் தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்தி இன்புற்று மகிழ்வோம்.
தமிழிசை விழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுக்க வருகிறார் கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன் அவர்கள். கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேலான இசைக் கச்சேரிகளை நடத்திய பெருமைக்கு உரியவர். இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகரின் மாணவர். தமிழை, அதன் ஒலிப்பு பிசகாமல் பாடி, தமிழிசையின் மூலம் கேட்போரைக் கட்டிப் போடுவதில் கைதேர்ந்த வல்லவரான இவரது நிகழ்ச்சி விழாவில் இடம் பெறுவது இசையார்வலர்க்கு.இன்ப அதிர்ச்சி!!
1 comment:
இப்பதிவில் இருக்கும் காணொலியில், எத்தனை முறை ‘முதன் முதலா’ என உச்சரிக்கப்படுகிறது? சரியாகச் சொல்பவர்களுக்கு, பரிசளிக்கப்படும்.
Post a Comment