Saturday, June 2, 2007

நடிகர்கள் சிவகுமாரும், கார்த்தி சிவகுமாரும் திருவிழாவில்!

"ரோசாப்பூ ரவிக்கைக்காரி" புகழ் நடிகர் சிவகுமாரும், "பருத்தி வீரன்" கார்த்தி் சிவகுமாரும் இவ்வாண்டு பெட்னா திருவிழாவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள்! இயக்குனர் சேரனுக்குப் பதிலாக இவர்களும், பட்டிமன்றக் கலைஞர்களில் திண்டுக்கல் லியோனிக்குப் பதில் திண்டுக்கல் முல்லை நடவரசு ஆகியோரும் வருகை தருகிறார்கள். தமிழ்ச் சூழலில் கலைஞர்களைப் பதிவு செய்வதும், அவர்களை நிகழ்ச்சிக்குக் குறித்த நேரத்தில் கொண்டு வருவதும் பெரும்பாடு என்பதை அனைவரும் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நன்றி!

கலந்துகொள்ளும் மற்ற கலைஞர்கள் குழுவிலும், தமிழறிஞர் குழுவிலும் மாற்றங்கள் ஏதுமில்லை.

நீங்கள் உடனே செய்ய வேண்டியவை:
  • திருவிழாவுக்கு முன்பதிவு செய்தல்
  • உங்கள் படைப்புகளை பெட்னா மலருக்கு அனுப்புதல்
  • உங்கள் தொழிலை பெட்னாவில் விளம்பரம் செய்தல்
  • உங்கள் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புகொண்டு நிகழ்ச்சிகளை வழங்க, நடத்த உதவுதல்.
புதிய நிகழ்ச்சி நிரல் கீழே (பெரிதாகப் பார்க்க, படத்தின் மேல் சொடுக்குக!):விபரங்களுக்கு: www.fetna.org
தொடர்புக்கு: fetna.malar@gmail.com

வருக! அன்புடன் சந்திக்கக் காத்திருக்கிறோம்!

No comments: