Thursday, June 7, 2007

பேரவை மாநாட்டில் வலைப்பதிவர் கருத்தரங்கம்!

Blogs என அழைக்கப்படும் வலைப்பதிவுகள் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இந்த வலைப்பதிவுகளால் பல சமூக, அறிவியல், கல்வி, தனிமனிதவுரிமை முதலான பல தளங்களிலும் விரைந்த மாறுதல்கள் ஏற்படுகின்றன. தமிழில் தற்போது இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வலைப்பதியலாம் என நம்பப்படுகிறது. வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் வலைப்பதிகிறார்கள். வலைப்பதிவர்களை ஒரே இடத்தில் சந்திக்கச் செய்யும் வலைத்திரட்டிகளுள் (blog aggregators) முன்மாதிரியாக விளங்குவது தமிழ்மணம் (www.thamizmanam.com). இவ்வாண்டு பேரவையின் மாநாட்டில் தமிழ்மணம் ஒரு வலைப்பதிவர் கருத்தரங்கை ஏற்பாடு செய்கின்றது. இது பேரவைக்கு வருகை தரும் வலைப்பதிவர்களையும், வலைப்பதிவில் ஆர்வம் உள்ளவர்களையும் ஒருங்கிணைக்க உதவும் என நம்புகிறோம். தமிழ்மணத்தின் அறிவிப்பும், தொடர்பு முகவரியும் கீழே தரப்பட்டுள்ளன. தயவு செய்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

தமிழ் வலைப்பதிவர்களுக்கிடையே நேரடி அறிமுகத்தினை ஏற்படுத்தவும் , கருத்தாடல்களுக்கு வழிவகுக்கவும், புதிதாக வலைப்பதிய விரும்புபவர்களுக்கு பயிற்சியளிக்கவும் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் (Federation of Tamil Sangams of North America, FeTNA) இணைந்து பேரவையின் ஆண்டுவிழாவின்போது ஒரு வலைப்பதிவர் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்ய தமிழ்மணம் விழைகின்றது. இம்முயற்சியின் தொடக்கமாக, இவ்வாண்டு, அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாநிலத்தில் அமைந்திருக்கும் ராலே நகரில் (Raleigh, NC) ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நிகழவிருக்கும் பேரவை நிகழ்வுகளின்போது முதலாவது வலைப்பதிவர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்கிறது. இந்தக் கருத்தரங்கத்தின் உத்தேசமான வடிவம் கீழே தரப்பட்டுள்ளது :
  • வலைப் பதிவர்கள், பதியாதவர்கள், பதிய விரும்புவோர், வாசிப்போர், யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம்.
  • கருத்தரங்கம் சுமார் 1-2 மணி நேரங்கள் நடக்கும் .
  • ஒருங்கிணைப்பாளர்/ மட்டுறுத்துனரின் அறிமுக உரை இருக்கும்.
  • புதிதாக வலைப்பதிய விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் விளக்கம் இருக்கும்.
  • ஒவ்வொரு வலைப்பதிவரும் தான் விரும்பும் தலைப்பில் (குறிப்பாக வலைப்பதிவு; மற்றபடி தமிழ், சமூகம் உள்ளிட்ட பல கருத்துக்களில்) உரையாற்றலாம், உரை வாசிக்கலாம், அல்லது தம் வெவ்வேறு விதமான கலைத் திறன்களை வெளிக்காட்டலாம். ஒருவருக்கு சுமார் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். வரும் வலைப்பதிவர்களின் தொகையினைப் பொறுத்து இக் கால அளவு மாறுபடும்.
  • ஒவ்வொரு பதிவரின் நிகழ்ச்சிக்குப் பின்னும், அவரிடம் , பார்வையாளர்கள் பொதுவில் கேள்வி கேட்பதற்கு (அல்லது கருத்துக் கூறுவதற்கு), இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்படும் .
  • அரங்கத்தில் நவீன ஒலி/ ஒளி, திரை/ projector வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே powerpointஐப் பயன்படுத்தி உரை நிகழ்த்துவது வரவேற்கப்படுகிறது .
  • பேரவையின் விழாவுக்கு வருகை தரும் ஒரு சிறப்பு விருந்தினரும் நமது கருத்தரங்கில் வந்து கலந்து கொள்வார்.

இக்கருத்தரங்கை மேம்படுத்த வலைப்பதிவர்கள் தங்கள் கருத்துக்களையும் , யோசனைகளையும் கூறி நிகழ்ச்சி சிறக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அனைத்து அமெரிக்க வலைப்பதிவர்களையும் பங்குபெற அழைக்கிறோம். பங்கு பெற விரும்பும் வலைப்பதிவர்கள்/மற்றவர்கள் தங்கள் விருப்பத்தினைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைக்க கீழ்க்கண்ட வலைப்பதிவர்கள் இசைந்துள்ளார்கள். அவர்களில் யாரையேனும் பதிவர்கள் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பாஸ்டன் பாலாஜி (bsubra at gmail dot com)
மயிலாடுதுறை சிவா (sivaakumar at gmail dot com)
இலவசக் கொத்தனார் (elavasam at gmail dot com)
சுந்தரவடிவேல் (sundara at gmail dot com)
சங்கரபாண்டி (sornam at gmail dot com)

அனைத்து வலைப்பதிவு ஆர்வலர்களையும் வரவேற்கிறோம்!

4 comments:

VSK said...

இது குறித்து நேற்றைய ஃபெட்னா பதிவிலேயே ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

மிக்க மகிழ்ச்ச்சி.

வருக! வருக!

naanjil said...

Oru nalla muyarchi. Nadunarkalluku
paarattukal. Vettri namathe

Nanjil Peter

Arasu said...

vaNakkam:
pEravai Thamizh vizhavil natakka irukkum valaipathiver karutharangam vetripera vaazhthukkaL. Thodarnthu ovvoru aaNdum pEravai Thamizh vizhavilum thodarnthu pathivaaLar karutharangam nadathungaL.
anbudan,
Periyadurai

Arasu said...

vaNakkam:
pEravai Thamizh vizhavil natakka irukkum valaipathiver karutharangam vetripera vaazhthukkaL. Thodarnthu ovvoru aaNdum pEravai Thamizh vizhavilum thodarnthu pathivaaLar karutharangam nadathungaL.
anbudan,
Periyadurai